Wednesday, October 8, 2014

ஜன்னல் மழையில்...

"அடர்ந்த கரிய பின்னிரவில் 
  வெளியே சடசடக்கும் மழை...
  ஜன்னல் விளிம்பில்  துளித் துளியாய்  நிறைந்து 
 கண்ணாடி  வழியே ஒற்றைக் கீற்றாய் 
 ஊற்றுகிறது 
 என் கண்ணீர்  போலவே...
 ஆவி படிந்த ஜன்னல் கண்ணாடி தாண்டி 
 எதுவும் தெரியவில்லை இருளில்..
 உன்  நினைவு படிந்த இதயம் தாண்டி 
 எதுவும் தெரியாததைப்போல் காதலில்..!!"